Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 8 தொழிற் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்...24,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்

8 தொழிற் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்...24,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்

By: Monisha Tue, 28 July 2020 1:07:26 PM

8 தொழிற் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்...24,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் 2,368 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காக புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், இன்றையதினம் 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

edappadi palanisamy,industry,companies,employment,economy ,எடப்பாடி பழனிசாமி,தொழில் துறை,நிறுவனங்கள்,வேலைவாய்ப்பு,பொருளாதாரம்

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.

கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).

edappadi palanisamy,industry,companies,employment,economy ,எடப்பாடி பழனிசாமி,தொழில் துறை,நிறுவனங்கள்,வேலைவாய்ப்பு,பொருளாதாரம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaust உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).

edappadi palanisamy,industry,companies,employment,economy ,எடப்பாடி பழனிசாமி,தொழில் துறை,நிறுவனங்கள்,வேலைவாய்ப்பு,பொருளாதாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.

கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.

விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Sri Raajarajeshwari Life Care நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் கொரோனா நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :