Advertisement

வீடு வீடாக சென்று முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

By: Monisha Tue, 29 Dec 2020 2:44:23 PM

வீடு வீடாக சென்று முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

2021 மே மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ம் தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.

election,campaign,aiadmk,chair,desire ,தேர்தல்,பிரச்சாரம்,அதிமுக,நாற்காலி,ஆசை

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று 2-வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த மாவட்டத்தின் முதலைப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் அங்கு பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல’ என தெரிவித்தார்.

Tags :
|
|