Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 224 சீன செயலிகளுக்கு இந்தியா தடை செய்யப்பட்டுள்ளதால் சீனா கலக்கம்

224 சீன செயலிகளுக்கு இந்தியா தடை செய்யப்பட்டுள்ளதால் சீனா கலக்கம்

By: Karunakaran Fri, 04 Sept 2020 5:57:47 PM

224 சீன செயலிகளுக்கு இந்தியா தடை செய்யப்பட்டுள்ளதால் சீனா கலக்கம்

லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பின்னர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் எல்லையில் பதற்றம் தணிந்தது. இந்நிலையில் சீனா மீண்டும் கடந்த 29-ஆம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டது. பின்னர் கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. அதன்படி, இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

china,india,ban,224 processors ,சீனா, இந்தியா, தடை, 224 செயலிகள்

இந்நிலையில், சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அதிகாரி காவ் பெங் கூறுகையில், இந்தியா சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும் என்று கூறினார்.

மேலும் அவர், இருதரப்பு ஒத்துழைப்பையும், வளர்ச்சியையும் பராமரிக்க இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை வழங்குபவர்களுக்கு திறந்த மற்றும் நியாயமான வணிகச் சூழலை உருவாக்க முடியும். இது சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் பரஸ்பர நன்மைகளை அளிக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
|
|
|