Advertisement

பாகிஸ்தானில் சிந்து போலீஸ்- ராணுவம் இடையே மோதல்

By: Nagaraj Wed, 21 Oct 2020 8:33:56 PM

பாகிஸ்தானில் சிந்து போலீஸ்- ராணுவம் இடையே மோதல்

உள்நாட்டு போர் உருவாகி வருகிறது... பாகிஸ்தானின் சிந்து மாகாண காவல்துறைத் தலைவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது தொடர்பாக சிந்து போலீசுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல்கள் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் உருவாகி வருகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சிந்து மாகாணத்தின் உயர்மட்ட காவல்துறைத் தலைவர் முஷ்டாக் அகமது மகரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் துறை தளபதி அலுவலகத்தில் நான்கு மணி நேரம் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

பி.எம்.எல்-என் தலைவர் கேப்டன் (ஓய்வு) முகமது சப்தார் மீது வழக்கு பதிவு செய்ய அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியமின் கணவர் தான் முகமது சப்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

pakistan,indus police,army,civil war ,பாகிஸ்தான், சிந்து காவல்துறை, ராணுவம், உள்நாட்டு போர்

அக்டோபர் 19’ம் தேதி, மரியம் தனது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். காவல்துறையினர் உள்ளே நுழைந்து கணவரை கைது செய்தபோது தான் ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். இருப்பினும், பாகிஸ்தானின் அமைச்சரும் பி.டி.ஐ கட்சித் தலைவருமான அலி ஹைதர் ஜைதி இந்த கோரிக்கையை மறுத்து, ஜின்னாவின் கல்லறைக்கு அவமரியாதை செய்த குண்டர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டினார்.

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் பிரதமர் இம்ரான் கானுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) பேரணியில் கலந்து கொள்ள சப்தார் மற்றும் அவரது மனைவி பி.எம்.எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் கராச்சிக்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஊடகமான தி இன்டர்நேஷனல் ஹெரால்ட், நேற்று கராச்சியில் வெடித்த சிந்து காவல்துறைக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் காரணமாக குறைந்தது 10 கராச்சி காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது.

Tags :
|