Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர், கவர்னர் வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர், கவர்னர் வாழ்த்து!

By: Monisha Fri, 13 Nov 2020 3:12:12 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர், கவர்னர் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

"தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து இன்பமும் இனிமையும் நிறைந்த நன்னாள் தீபாவளி" என்று கூறி உள்ளார்.

edappadi palanisamy,banwarilal purohit,deepavali festival,greetings ,எடப்பாடி பழனிசாமி,பன்வாரிலால் புரோகித்,தீபாவளி பண்டிகை,வாழ்த்து

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

"தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்" என்று கூறி உள்ளார்.

Tags :