இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிடும் - முதல்வர் வாழ்த்து
By: Monisha Sun, 29 Nov 2020 1:44:54 PM
கார்த்திகை தீப திருநாளையொட்டி, அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு டுவிட்டரில் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த "திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Tags :