Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த தொழிலும் இல்லாமல் பிழைத்து வருபவர் ஸ்டாலின்; முதல்வர் காட்டம்

எந்த தொழிலும் இல்லாமல் பிழைத்து வருபவர் ஸ்டாலின்; முதல்வர் காட்டம்

By: Monisha Thu, 12 Nov 2020 7:03:55 PM

எந்த தொழிலும் இல்லாமல் பிழைத்து வருபவர் ஸ்டாலின்; முதல்வர் காட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 10 ஆம் தேதி திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற காணொலி காட்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி வேடம் போடுகிறார். அவர் விவசாயி எனக் கூறிக்கொள்வது மகா பெரும் பொய். ஒரு விவசாயியாக இருந்தால் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத் திருத்தங்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். விவசாயி என்றால் இப்படி செய்திருக்க முடியாது எனப் பேசினார்.

இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். இக்கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

edappadi palanisamy,farmer,mk stalin,industrialist,hard worker ,எடப்பாடி பழனிசாமி,விவசாயி,மு.க.ஸ்டாலின்,தொழில்,கடின உழைப்பாளி

"ஸ்டாலினுக்கு என்ன தொழில் என்று மறுகேள்வி எழுப்பினார். மேலும் எந்த தொழிலும் இல்லாமல் பிழைத்து வருபவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்று காட்டமாகக் கருத்துக் கூறியுள்ளார். மேலும், விவசாயம்தான் எனது முதல் தொழில். எனது குழந்தை பருவத்தில் இருந்தே நான் விவசாயி. இது என் ஊர்க்காரர்கள் அனைவருககும் தெரியும். நான் எவ்வளவு கடின உழைப்பாளி என்பது அவர்களுக்கு தெரியும்.

நான் விவசாயி என்பதை உறுதிப்படுத்த ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் தரத் தேவையில்லை. மேலும் முதல்வராக இருக்கும்போதும் நான் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன். விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடம் வகித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

Tags :
|