மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை
By: Monisha Mon, 07 Sept 2020 6:18:12 PM
தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரை சேர்ந்த 21 வயது கல்பனா தனியார் கல்லூரி ஒன்றில் எம்சிஏ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் அரசு வங்கியில் பணிபுரியும் ஒருவர் பெண் பார்க்க வந்துள்ளார்.
33 வயதான அவர் கல்பனாவை பார்த்தவுடன் தனக்கு பெண்ணை பிடித்து விட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளையின் வயது அதிகம் என்பதால் கல்பனாவுக்கு அவரை பிடிக்கவில்லை. இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோருக்கும் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அரசு வங்கியில் பணிபுரியும் நல்ல மாப்பிள்ளை என்று கல்பனாவுக்கு பெற்றோர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கழுத்தில் பிளேடால் அறுத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ரத்த வெள்ளத்தில் மிதந்த கல்பனாவை வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்பனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.