Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் - சசிதரூர்

By: Karunakaran Mon, 10 Aug 2020 2:59:47 PM

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் - சசிதரூர்

கடந்த மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை வகித்ததால் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது.

தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதனால் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு (10-ம் தேதி) ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

congress,elect,full-time leader,sachitharur ,காங்கிரஸ், தேர்வு, முழுநேர தலைவர், சச்சிதரூர்

ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சசிதரூர் கூறுகையில், நமது கட்சி தலைமை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். கடந்த ஆண்டு சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது நானும் வரவேற்றேன். ஆனால் அவர் நீண்டகாலம் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. நிரந்தர தலைவரை தேர்வுசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





Tags :
|