Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஷ்பு கருத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

குஷ்பு கருத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

By: Monisha Fri, 31 July 2020 09:41:31 AM

குஷ்பு கருத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

புதிய கல்விக்கொள்கைக்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து மீண்டும் குஷ்பூ டுவிட் செய்துள்ளார். அதில், 'நான் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும், என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ளார். மேலும், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

kushboo,congress,ks alagiri,new education policy,controversy ,குஷ்பு,காங்கிரஸ்,கேஎஸ் அழகிரி,புதிய கல்விக்கொள்கை,சர்ச்சை

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு. காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம்; ஆனால் பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மை. ஏதோ லாபம் எதிர்பார்ப்பதுபோன்று கருத்து சொல்லக்கூடாது. சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடாகும்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர். ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதுபோல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :