Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; கட்டிட தொழிலாளி பலி

காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; கட்டிட தொழிலாளி பலி

By: Monisha Mon, 21 Sept 2020 4:46:50 PM

காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; கட்டிட தொழிலாளி பலி

காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்தில் சிகிச்சை பலனின்றி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு வேலைக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். உடன் அவருடைய நண்பர்கள் அசோக் (28) மற்றும் ஜெகதீஷ் (20) ஆகியோரும் சென்றனர். மோட்டார் சைக்கிளை அபினேஷ் ஓட்டியுள்ளார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பின்புற நுழைவு வாயில் அருகே செல்லும்போது எதிரே ஒரு கார் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

car,motorcycle,accident,teenager,killed ,கார்,மோட்டார் சைக்கிள்,விபத்து,வாலிபர்,பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் அபினேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். அசோக் மற்றும் ஜெகதீசுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
|