Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைப்பகுதிகள் தொடர்ந்து மழை!

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைப்பகுதிகள் தொடர்ந்து மழை!

By: Monisha Mon, 14 Sept 2020 4:00:51 PM

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைப்பகுதிகள் தொடர்ந்து மழை!

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைப்பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

பாபநாசம் அணையில் தற்போது 83.10 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1055.44 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 804.75 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசம் அணை 143 அடிகொள்ளளவு கொண்டது. சேர்வலாறு அணையில் 92.52 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 67.97 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைப்பகுதியை தவிர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

dam,rain,irrigation,western ghats ,அணைப்பகுதி,மழை,பாசனம்,மேற்கு தொடர்ச்சி மலை

மேலும், புளியரை, கற்குடி, தவணை, மேக்கரை, அச்சம்புதூர், நெடுவயல், இலத்தூர், வள்ளம், பிரானூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் இருண்டே காணப்படுகிறது.

குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்கிறது. அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 21 மில்லிமீட்டரும், தென்காசியில் 13.40 மில்லிமீட்டரும், குண்டாறில் 7 மில்லிமீட்டரும், கருப்பாநதி, ராமநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

Tags :
|
|