Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பருவமழை... நிரம்பும் தருவாயில் அணைகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பருவமழை... நிரம்பும் தருவாயில் அணைகள்!

By: Monisha Thu, 19 Nov 2020 2:46:01 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பருவமழை... நிரம்பும் தருவாயில் அணைகள்!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. அதிலும் கொடைக்கானல், வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை விடாமல் கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 575.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் புல்லாவெளி அருகே மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மலைப்பாதையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. தற்போது அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

monsoon,kodaikanal,thunder,lightning,dams ,பருவமழை,கொடைக்கானல்,இடி,மின்னல்,அணைகள்

மீனாட்சி ஊத்து பகுதியில் பாறாங்கற்கள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டு, அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. எனவே, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 47.44 அடியாகவும், 90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணையின் நீர்மட்டம் 68.22 அடியாகவும், 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணையின் நீர்மட்டம் 64.47 அடியாகவும் உள்ளது. ஒருசில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து அணைகளும் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது.

Tags :