Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

By: Monisha Tue, 17 Nov 2020 11:28:23 AM

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 3 மாவட்டங்களையும் சேர்த்து 25 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை யூனியன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,620 ஆக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,939-ஆக உள்ளது.

nellai,thoothukudi,tenkasi,corona virus,infection ,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி,கொரோனா வைரஸ்,பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு நேற்று ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,474-ஆக உள்ளது. இதில் 15,108 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Tags :
|