Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Fri, 18 Dec 2020 08:25:57 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 167 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் 16 ஆயிரத்து 157 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3262 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை.

virudhunagar,corona virus,infection,treatment,kills ,விருதுநகர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. 1,310 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை தாமதமாக அறிவிப்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய் விடுகிறது. எனவே கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags :