Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Thu, 24 Dec 2020 08:00:29 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 16,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று புதிதாக 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 45 ஆயிரத்து 33 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,765 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 92 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

corona virus,infection,treatment,death,virudhunagar ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி,விருதுநகர்

இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. 1,460பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 2,700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் பரிசோதனை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

Tags :
|