Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Tue, 20 Oct 2020 5:10:29 PM

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 427-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 699 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona virus,infection,treatment,death,examination ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி,பரிசோதனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்தது. 739 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|