Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Thu, 01 Oct 2020 10:24:41 AM

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 646 பேர். விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 7 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 610 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்றைய 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 31
செங்கல்பட்டு - 335
சென்னை - 1,295
கோவை - 574
கடலூர் - 137
தர்மபுரி - 41
திண்டுக்கல் - 32
ஈரோடு - 161
கள்ளக்குறிச்சி - 41
காஞ்சிபுரம் - 207
கன்னியாகுமரி - 97
கரூர் - 56
கிருஷ்ணகிரி - 75
மதுரை - 88
நாகை - 48
நாமக்கல் - 161
நீலகிரி - 80
பெரம்பலூர் - 14
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 12
ராணிப்பேட்டை - 82
சேலம் - 378
சிவகங்கை - 27
தென்காசி - 38
தஞ்சாவூர் - 266
தேனி - 68
திருப்பத்தூர் - 58
திருவள்ளூர் - 275
திருவண்ணாமலை - 147
திருவாரூர் - 56
தூத்துக்குடி - 91
திருநெல்வேலி - 93
திருப்பூர் - 137
திருச்சி - 97
வேலூர் - 139
விழுப்புரம் - 112
விருதுநகர் - 16
விமான நிலைய கண்காணிப்பு - 6

Tags :