மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8348 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sat, 18 July 2020 10:32:58 PM
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 8,348 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மகாராஷ்டிரத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 8,348 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 144 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் இன்று 5,307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத்
தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,00,937 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,65,663 பேர் குணமடைந்து உள்ளனர், 11,596 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 65 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து
மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,00,178 ஆகவும், பலி
எண்ணிக்கை 5,647 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 24,039 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.