Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 48 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் 48 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

By: Nagaraj Tue, 16 June 2020 9:22:48 PM

தமிழகத்தில் 48 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் 48 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், பலி எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 61 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 48,019 ஆக உயர்ந்துள்ளது.

corona,victim,tamil nadu,health department,healed ,கொரோனா, பாதிப்பு, தமிழகம், சுகாதாரத்துறை, குணமடைந்தனர்

மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 19,242 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,48,244 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|