Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா நிலவரம்... சிகிச்சையில் 10 ஆயிரத்து 788 பேர்!

தமிழகத்தில் கொரோனா நிலவரம்... சிகிச்சையில் 10 ஆயிரத்து 788 பேர்!

By: Monisha Mon, 07 Dec 2020 08:32:02 AM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்... சிகிச்சையில் 10 ஆயிரத்து 788 பேர்!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 788 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 32
செங்கல்பட்டு - 554
சென்னை - 3,257
கோவை - 899
கடலூர் - 92
தர்மபுரி - 137
திண்டுக்கல் - 198
ஈரோடு - 399
கள்ளக்குறிச்சி - 54
காஞ்சிபுரம் - 268
கன்னியாகுமரி - 160
கரூர் - 145
கிருஷ்ணகிரி - 168
மதுரை - 219
நாகை - 183
நாமக்கல் - 222
நீலகிரி - 210
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 83
ராமநாதபுரம் - 39
ராணிப்பேட்டை - 72
சேலம் - 531
சிவகங்கை - 64
தென்காசி - 96
தஞ்சாவூர் - 193
தேனி - 50
திருப்பத்தூர் - 76
திருவள்ளூர் - 497
திருவண்ணாமலை - 152
திருவாரூர் - 127
தூத்துக்குடி - 139
திருநெல்வேலி - 174
திருப்பூர் - 536
திருச்சி - 191
வேலூர் - 319
விழுப்புரம் - 92
விருதுநகர் - 136
விமானநிலைய கண்காணிப்பு - 20

Tags :