Advertisement

நெல்லை மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 09 July 2020 12:01:12 PM

நெல்லை மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,439-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

coronavirus,infection,death,treatment,testing ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,பரிசோதனை

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 702 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,439-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக சோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Tags :
|