Advertisement

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sat, 01 Aug 2020 2:40:43 PM

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தொற்றால் 5,212 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3,935 பேர் பலியாகி உள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து தற்போது திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.

nellai district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 5,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 2,948 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,387-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|