Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 15 July 2020 11:38:24 AM

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை தவிர தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

nellai district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 935 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 181 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,116-ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags :
|