Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sat, 26 Sept 2020 10:36:13 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 11,044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 5,13,836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்தம் பலி எண்ணிக்கை 9,148-ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

villupuram district,corona virus,infection,treatment,kills ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,044-ஆக இருந்தது. அவர்களில் சிகிச்சை பெற்று வந்த 10,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,205-ஆக உயர்ந்துள்ளது.

Tags :