Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 228 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 228 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sun, 29 Nov 2020 12:47:57 PM

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 228 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் புதிதாக 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 648 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 651 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

thiruvallur,chengalpattu,kancheepuram,corona virus,infection ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 389-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 712 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 282 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :