Advertisement

மதுரை மாவட்டத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 16 July 2020 11:30:19 AM

மதுரை மாவட்டத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,331 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

madurai district,corona virus,infection,death,treatment ,மதுரை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,331 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,651 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,855 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
|