Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி!

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி!

By: Monisha Wed, 21 Oct 2020 5:38:03 PM

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிய போது மாநிலத்தில் பெருபாலான மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அதேபோல் கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் வேகமாக காணப்பட்டது. தினமும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. அதேசமயம் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்தே உள்ளது.

karur district,corona virus,infection,treatment,kills ,கரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பழைய ரெங்கபாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர், திண்ணப்பா நகரை சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் 40 வயது பெண், அண்ணாநகரை சேர்ந்த 47 வயது பெண் உள்ளிட்ட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags :