Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sat, 10 Oct 2020 12:57:34 PM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 12,425-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

villupuram district,corona virus,infection,treatment,kills ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,371-ஆக இருந்தது. அவர்களில் சிகிச்சை முடித்து 11,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,425-ஆக உயர்ந்துள்ளது.

Tags :