Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 24 July 2020 1:41:06 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 10,627 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ள நிலையில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 232 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்து உள்ளது.

tiruvallur district,corona virus,infection,death,treatment ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர்,மதுரை, தேனி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 10,627 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் 3,892 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகினறனர். 6,547 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மாவட்டத்தில் 188 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags :
|