திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 469 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Mon, 20 July 2020 5:23:06 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 9,110 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 469 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 9,110 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 469 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,579 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 159 பேர் உயிரிழந்துள்ளனர்.