Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 25 Sept 2020 10:12:17 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 10,876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

villupuram district,corona virus,infection,treatment,kills ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,876-ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9,878 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் கொரோனாவுக்கு இதுவரை 95 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,007-ஆக உயர்ந்துள்ளது.

Tags :