Advertisement

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sat, 01 Aug 2020 12:09:44 PM

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5,875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 57 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர்.

vellore district,corona virus,infection,treatment,deaths ,வேலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து தற்போது திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5,875 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,087 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :