Advertisement

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 11 பயணிகளுக்கு கொரோனா

By: Nagaraj Tue, 22 Dec 2020 9:36:33 PM

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 11 பயணிகளுக்கு கொரோனா

11 பயணிகளுக்கு கொரோனா... பிரிட்டனில் இருந்து குஜராத், பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த 11 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு 250 பயணிகள், 22 ஊழியர்களுடன் செவ்வாய் கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பயணிகளுக்கு, ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

uk,air travelers,ban,corona,invention ,பிரிட்டன், விமான பயணிகள், தடை, கொரோனா, கண்டுபிடிப்பு

மேலும், ஆமதாபாதிற்கு இன்று காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த 275 பயணிகளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் மரபணுவைக் கண்டறிய புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், டில்லிக்கு வந்த 5 பேருக்கு, கொல்கத்தாவிற்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா - பிரிட்டன் இடையே இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|