திருவள்ளூரில் ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா
By: Nagaraj Tue, 07 July 2020 3:12:01 PM
ஒரே நாளில் 200 பேருக்கு பாதிப்பு... திருவள்ளூரில் இன்று மட்டும் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978ஐ எட்டியுள்ளது. பலி எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 19ம் தேதி முதல் ஜுலை
5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று முதலே தளர்வுகள்
அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில்,
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 5201 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 6 பேர்
உயிரிழந்திருப்பதால், திருவள்ளூரில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ
எட்டியுள்ளது.