திருச்சி மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: Monisha Tue, 15 Sept 2020 09:32:47 AM
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 8,840 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,914 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 131 பேர் உயிரிழந்துள்ளனர்.