Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 20 Oct 2020 10:47:32 AM

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் புதிதாக தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 36 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒரே நாளில் 49 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 545 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 205 பேர் இறந்துள்ளனர்.

tirunelveli,tenkasi,thoothukudi,corona virus,vulnerability ,திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி,கொரோனா வைரஸ்,பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 434 பேர் வீடு திரும்பி உள்ளனர். 155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 537-ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 851 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 560 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 126 பேர் இறந்து உள்ளனர்.

Tags :