Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; டாக்டர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; டாக்டர் ராதாகிருஷ்ணன்

By: Monisha Mon, 16 Nov 2020 09:18:38 AM

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; டாக்டர் ராதாகிருஷ்ணன்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு முதன்மை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

dr. radhakrishnan,tamil nadu,corona virus,infection,study ,டாக்டர் ராதாகிருஷ்ணன்,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,ஆய்வு

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

திருவள்ளூரில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் ரூ.220 கோடி மதிப்பீட்டில் கல்லூரி தங்கும் விடுதிகள் என ரூ.385 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும் என கூறினார்.

Tags :