கைக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானது
By: Nagaraj Fri, 09 Oct 2020 3:45:53 PM
குழந்தைக்கு கொரோனா... கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய இந்த தகவலினை வெளியிட்டுள்ளார். மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைவாகவே குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில்
இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இதனால் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :
child |
corona |
spread |