அனுபம் கெர் குடும்பத்தினருக்கு கொரோனா உறுதியானது
By: Nagaraj Sun, 12 July 2020 8:13:47 PM
மும்பையில் அடுத்தடுத்து பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அறிந்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல பிரபலங்களும், அவர்களின் உறவினர்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிறகு ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதனாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெர் குடும்பத்தில்
கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபம் கெர்ரின் தாயார் துலாரிக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். மேலும் அவரின் சகோதரர் மற்றும் மருமகளுக்கும் கொரோனா
அறிகுறிகள் இருப்பதாகக் கூறிப்படுகிறது.
அனுபம் கெர்-க்கு சோதனை
செய்த போது கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த செய்தியை அனுபம் தன்
டிவிட்டர் பக்கத்தில் காணொளிப் பதிவாக வெளியிட்டு உள்ளார். தொடர்ந்து அனில்
கபூர், திவ்யா தத்தா, சுரேஷ் ரெய்னா, அசோக் பண்டிட் போன்ற பிரபலங்களும்,
ரசிகர்களும் அனுபம் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பப் பிராத்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.