Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

By: Monisha Mon, 23 Nov 2020 08:39:39 AM

ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து  கொரோனா நோயாளி தற்கொலை

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 54) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் டாக்டர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் அவரை தேடிக்கொண்டிருந்தனர்.

hospital,corona patient,suicide,treatment,depression ,ஆஸ்பத்திரி,கொரோனா நோயாளி,தற்கொலை,சிகிச்சை,மனஅழுத்தம்

அப்போது ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 4-வது மாடியின் பின்பகுதியில் இருந்து கீழே குதித்து சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சிகிச்சையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :