தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22,333 ஆக உயர்வு
By: Nagaraj Sun, 31 May 2020 8:31:32 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22,333 ஆக உயர்வு... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 757 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 12,757 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 12,807 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 4,91,622 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 1,149 பேரில் 95 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.