Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி

By: Monisha Wed, 15 July 2020 11:07:20 AM

வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,098 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

vellore district,corona virus,infection,death,treatment ,வேலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,098 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,378 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,344 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|