Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சியில் மாநகர் பகுதிகளில் தினம்தினம் உயர்கிறது கொரோனா பாதிப்பு

திருச்சியில் மாநகர் பகுதிகளில் தினம்தினம் உயர்கிறது கொரோனா பாதிப்பு

By: Nagaraj Mon, 29 June 2020 11:22:47 AM

திருச்சியில் மாநகர் பகுதிகளில் தினம்தினம் உயர்கிறது கொரோனா பாதிப்பு

திருச்சி மாநகர் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில், புறநகர் பகுதிகளை விட மாநகர் பகுதிகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 501. இதில், 302 பேர் குணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய 197 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை புறநகர்ப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் கோட்டம் வாரியாக அரியமங்கலத்தில் 70 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 91 பேர், பொன்மலையில் 81 பேர், ஸ்ரீரங்கத்தில் 99 பேர் என ஜூன் 27-ம் தேதி வரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 341. இதில், அரியமங்கலத்தில் 31 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 59 பேர், பொன்மலையில் 44 பேர், ஸ்ரீரங்கத்தில் 61 பேர் என 195 பேர் குணமடைந்துள்ளனர். 143 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

trichy,increase,corona,affect,fear,full curfew ,திருச்சி, அதிகரிப்பு, கொரோனா, பாதிப்பு, அச்சம், முழு ஊரடங்கு

மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் ஓரிரு வார்டுகளைத் தவிர எஞ்சிய அனைத்து வார்டுகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 160 பேரில் இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளனர். 52 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் 82 பேர், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 78 பேர், தனியார் மருத்துவமனைகளில் 37 பேர் என மாவட்டத்தில் 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடக்கத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவாக இருந்து, அதுவும் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

Tags :
|
|
|
|