விக்டோரியா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது
By: Nagaraj Wed, 05 Aug 2020 10:29:35 PM
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், இன்று (புதன்கிழமை) வெளியான புள்ளிவிபரங்களின் படி, புதிதாக 725 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வேகமாக கொரோனா பரவி வருகிறது.
இது இரண்டாவது அலை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதன் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை மூட வழிவகுத்துள்ளது. இதேவேளை, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட விக்டோரியா மாநிலத்தில், நாளொன்றுக்கு 15பேர் உயிரிழப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விக்டோரியாவில் உள்ள மாநில அரசு மெல்பேர்னில் இரவு ஊரடங்கு உத்தரவு
விதித்தது மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. புதன்கிழமை
இரவு முதல் பெரும்பாலான வணிகங்களை மூடவும் இது உத்தரவிட்டது.
ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்ட 19,500பேரில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் விக்டோரியாவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.