இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா; அஜித் ரோஹண தகவல்
By: Nagaraj Tue, 10 Nov 2020 3:41:34 PM
இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 6 பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 355 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு
உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட
பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும்
குறிப்பிட்டுள்ளார்.