தஞ்சையில் ஆயுதப்படை பெண் போலீசுக்கு கொரோனா; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
By: Nagaraj Wed, 01 July 2020 2:03:53 PM
ஆயுதப்படை பெண் போலீசுக்கு கொரோனா... தஞ்சை ஆயுதப்படையில் பணி செய்யும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த பெண் போலீசுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் குடியிருந்த காவலர் குடியிருப்பு பகுதி மூடப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு, அதன்பிறகு நடந்த ரோல் காலில் அவர் கலந்து
கொண்டுள்ளார். அதனால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் அச்சத்தில்
உள்ளனர். மேலும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி
அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சையிலும் தற்போது கொரோனா பரவல்
அதிகரித்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று முதல் மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டு வந்த பொது போக்குவரத்து
சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே அடைந்து
கிடக்கின்றனர்.