Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தந்தையை அடுத்து மகனுக்கும் கொரோனா; நடிகர் அபிஷேக்பச்சன் மருத்துவமனையில் அனுமதி

தந்தையை அடுத்து மகனுக்கும் கொரோனா; நடிகர் அபிஷேக்பச்சன் மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Sun, 12 July 2020 09:15:47 AM

தந்தையை அடுத்து மகனுக்கும் கொரோனா; நடிகர் அபிஷேக்பச்சன் மருத்துவமனையில் அனுமதி

இந்தி பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு அடுத்ததாக அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில், “எனது தந்தை, நான் இருவரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம். இலேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.

abhishek bachchan,corona,confirmation,hospital,twitter ,அபிஷேக் பச்சன், கொரோனா, உறுதி, மருத்துவமனை, டுவிட்டர்

எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அனைவரையும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அமிதாப் மனைவி ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் அமிதாப்பச்சன் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவையில்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ்தோப் கூறுகையில், அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகள்தான். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகைகள் ரவீனாடான்டன், டாப்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|