Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது!

By: Monisha Wed, 22 July 2020 4:29:09 PM

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது!

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 2,851 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

nellai district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 2,851 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,614 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,079-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|