Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

By: Monisha Tue, 04 Aug 2020 3:19:22 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,750 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், பலி எண்ணிக்கை 4241 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,02,985 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது தென் மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

tiruvallur district,corona virus,infection,death,treatment ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,750 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,095 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிகிச்சையிலிருந்து இதுவரை 11,083 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் மாவட்டத்தில் இதுவரை 258 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags :
|